தீவிரவாதம் முற்றிலும் களையப்பட வேண்டும் - வெங்கய்யா நாயுடு

தீவிரவாதம் முற்றிலும் களையப்பட வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
தீவிரவாதம் முற்றிலும் களையப்பட வேண்டும் - வெங்கய்யா நாயுடு
x
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற 21-வது மஹாவீர்  விருது வழங்கும் விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வெங்கய்யா நாயுடு, ஒட்டுமொத்த உலகின் கலாச்சார தலைநகரமாக இந்தியா விளங்குவதாக கூறினார். தீவிரவாதம் முற்றிலுமாக களையப்பட வேண்டும் என்றும் கூறிய வெங்கய்யா நாயுடு, சமூகத்திற்கு சேவை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக வேதனை தெரிவித்தார். முன்னதாக பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆன்மீகத்திற்கு  இந்தியா தான் வழிகாட்டி என்றும், அசாம் , மேகாலயா மாநிலங்களை தொடர்ந்து, தமிழக ராஜ்பவனையும் தான் சைவமாக மாற்றியுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்