"ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் பேச வேண்டும்" - தினகரன்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் பேச வேண்டும் - தினகரன்
x
திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் ஜெயக்குமார் அலட்சியமாக நடந்துகொண்டதாக அந்த அமைப்பினர் கூறியிருப்பதாகவும், இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்