ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சி அனுப்பி வைப்பு : ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட மேலும் 3 பேர் கைது

சென்னைக்கு ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அனுப்பி வைத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சி அனுப்பி வைப்பு : ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட மேலும் 3 பேர் கைது
x
சென்னைக்கு ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அனுப்பி வைத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கடந்த மாதம் ஜோத்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் 12 பெட்டிகளில் கெட்டு போன நிலையில் ஆட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. அது நாய் இறைச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆய்வில் அது கெட்டுப்போன ஆட்டிறைச்சி என தெரிய வந்ததையடுத்து சென்னையை சேர்ந்த கணேசன் ஜெய்சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்