விளைநிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் : வாழை மரங்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை

சத்தியமங்கலம் அருகே விளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. அங்குள்ள விளாமுன்டி வனப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
விளைநிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் : வாழை மரங்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை
x
சத்தியமங்கலம் அருகே விளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. அங்குள்ள விளாமுன்டி வனப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இன்று காலையில், கோடேபாளையம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், அருணாசலம் என்ற விவசாயியின் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. உடனே, அப்பகுதி விவசாயிகள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டியடித்தனர். எனினும், 100 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்