செல்போன் கதிர்வீச்சால் பறவைகளுக்கு பாதிப்பா..? - பறவையியல் ஆராய்ச்சி மையம் விளக்கம்

செல்போன் கதிர்வீச்சுகளால் பறவை இனங்கள் அழிந்து வருவதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பறவையியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.
x
* அண்மையில் வெளியான ரஜினியின் 2 பாயிண்ட் ஓ படத்தில், பறவை இனங்கள் அழிந்து வருவதற்கு  செல்போன் கதிர்வீச்சே காரணம் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

* இதனை கோவை ஆனைகட்டியில் இயங்கி வரும் மத்திய அரசு கல்வி நிறுவனமான சலீம் அலி பறவையியஸ் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சங்கர் மறுத்துள்ளார்.  

* இது குறித்து முறையான ஆய்வுகள் செய்யப்படவில்லை என்றும், நிரூபிக்கப்பட்டால் தான் அதை உறுதி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பறவை இனங்கள் அழிவுக்கு, பூச்சிக்கொல்லி பயன்பாடு, வாழ்விடங்கள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் பறவையியல் மையத்தின் இயக்குநர் சங்கர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்