பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சில்லரை கேட்பது போல் நடித்து நூதன கொள்ளை...

ஆரணியில் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சில்லரை கேட்பது போல் நடித்து பணம் கொள்ளையடிக்கும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சில்லரை கேட்பது போல் நடித்து நூதன கொள்ளை...
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சில்லரை கேட்பது போல் நடித்து கொள்ளை சம்பவம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார் வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்