மருத்துவ மாணவியின் படிப்பு பாதிப்பு : கல்வி கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர்

கல்வி கட்டணம் செலுத்தாததால் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தாமே நேரில் வங்கிக்கு சென்று 4 லட்ச ரூபாய் கல்விகடன் பெற்று தந்தார்.
மருத்துவ மாணவியின் படிப்பு பாதிப்பு : கல்வி கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர்
x
கல்வி கட்டணம் செலுத்தாததால் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தாமே நேரில் வங்கிக்கு சென்று 4 லட்ச ரூபாய் கல்விகடன் பெற்று தந்தார். கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சகானாஸ் பேகம் என்ற அந்த மாணவி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் அந்த மாணவி கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் நின்று விட்டார். இந்நிலையில் கல்விக்கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்