பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வுரிமையை மீட்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும் - ஸ்டாலின்

கஜா புயல் தொடர்பான ஆய்வறிக்கையை சமர்பித்து விரைந்து நிவாரணம் கிடைக்க மத்திய குழுவினர் உதவ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வுரிமையை மீட்க  திமுக தொடர்ந்து வலியுறுத்தும் - ஸ்டாலின்
x
* சேதங்களை முழுமையாக மதிப்பிடாமல் உரிய ஆலோசனை நடத்தாமல் பிரதமரிடம் முதல்வர் கேட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம்,   குறைவான தொகைதான் என தெரிவித்துள்ளார்.

* ஆனால், அந்தத் தொகையாவது உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

* மத்திய-மாநில அரசுகளிடமிருந்து நியாயமான நிவாரணம் கிடைத்திடவும்,பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வுரிமையை மீட்டு எடுக்கவும் திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். 

* பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுகவினர்  தொடர்ந்து உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்