பூட்டிக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்னூரிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் கே.என்.ஆர்.நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்த இந்த சுகாதார நிலையத்திற்கு சரியான முறையில் மருத்துவர்கள் செவிலியர்கள் வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் போதிய மருத்துவ வசதிகள் இன்றி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பூட்டிக் கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பதோடு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்