ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை அகற்ற திட்டம் : 4 மாத காலம் அவகாசம் கோரி குடிசைவாசிகள் போராட்டம்
கூவம் நதிக் கரையோரம் கட்டியுள்ள குடிசை வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடிசைவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில், கூவம் நதிக் கரையோரம் கட்டியுள்ள குடிசை வீடுகளை அகற்ற உள்ளதை அறிந்து, அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். சிந்தாதிரிப்பேட்டை, நெடுஞ்செழியன் நகரில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், போராட்டம் நடத்திய பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிள்ளைகளின் கல்வி பாதிக்கும் எனக்கூறி, நான்கு மாத அவகாசம் கேட்டு, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு தங்களுக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பிற்கு செல்வதாகவும் கூறியுள்ளனர்...
Next Story