லிப்டில், மாணவி முன் அநாகரீமாக நடக்க முயன்ற விவகாரம் : ஒருவர் கைது- போலீஸ் விசாரணை

சென்னை தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவி முன் அநாகரீகமாக நடந்துகொண்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
x
சென்னை காட்டாங்குளத்தூரில் செயல்படும் தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், லிப்டில், மாணவி முன் அநாகரிமாக நடக்க முயன்றுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக செட்டி புண்ணியம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் சுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கல்லூரி விடுதி கேன்டீனில் வீணாகும் உணவுகளை சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வந்ததாக  கூறப்படுகிறது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில்,  சம்பந்தப்பட்ட நபர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்ததாகவும், தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்