தேனியில் 'தினத்தந்தி' கல்வி நிதி வழங்கும் விழா

தேனியில், 'தினத்தந்தி' கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.
தேனியில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா
x
தேனியில், 'தினத்தந்தி' கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் மேல்படிப்புக்கு 'தினத்தந்தி' நிதி உதவி அளித்து வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் 10 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், தேனி ஆட்சிய பல்லவி பல்தேவ் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்