சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிப்பு : கேரள காவல்துறையைக் கண்டித்து முழு அடைப்பு

சபரிமலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமித்த கேரளா காவல்துறையினரை கண்டித்து,கன்னியாகுமரியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
x
பாரம்பரிய முறைப்படி இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நிலக்கல்லில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அரசு பேருந்தில் பம்பைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள காவல்துறையைக் கண்டித்து கன்னியாகுமரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. உணவகங்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் இயக்கப்படாததால் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்