திருவண்ணாமலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றம்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றம்...
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாயொட்டி, இன்று அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அண்ணாமலையார் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து, உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண, சுமார் 25 லட்சம் பக்தர்களுக்கு மேல் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்