சேலம் : கொலை வழக்கு கைதி நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை மிரட்டல்

சேலம் நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் : கொலை வழக்கு கைதி நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை மிரட்டல்
x
சேலம் நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மல்லூர் பகுதியை சேர்ந்த கபாலி என்ற சுப்பிரமணி, கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவல் நீட்டிப்பு செய்வதற்காக நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, தனது 2வது மனைவி தவமணியை போலீசார் துன்புறுத்தி வருவதாக கூறி, பிளேடால் கையை அறுத்துக் கொள்வதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், தரையில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், கபாலியின் இரண்டு மனைவிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. 

Next Story

மேலும் செய்திகள்