காஞ்சிபுரத்திற்கு கனமழை எச்சரிக்கை : மழை பாதிப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
x
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தண்ணீரை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கவும், 3 ஆயிரம் களப்பணியாளர்கள், தயார் நிலையில் இருப்பதாக கூறினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டதாகவும், அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்