கஜா புயல் : சுவர் இடிந்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

பட்டுக்கோட்டை அருகே கஜா புயலால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிவ கொல்லை மகராஜ புரத்தை சேர்ந்த வேல்முருகன். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் உறவினர் மகன் அய்யாதுரை என்ற கல்லூரி மாணவனும் இவர்கள் வீட்டில் தங்கியுள்ளார். கஜா புயலின் போது வீசிய பலத்த சூறைக் காற்றால் வேல்முருகனின் வீட்டுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு வேல்முருகனின் 3 மகன்கள் மற்றும் அவரது உறவினர் மகன் என 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய தாய் மல்லிகா மீட்கப்பட்டார். தங்களின் எதிர்காலம் இவர்கள் தான் என நம்பியிருந்த நிலையில் 3  மகன்கள்  உயிரிழந்த சம்பவம் பெற்றோரை சோகத்தில் உறைய வைத்திருக்கிறது...

Next Story

மேலும் செய்திகள்