தமிழகத்தில் முதன்முறையாக உணவகம் திறந்த திருநங்கை
தூத்துக்குடி சவோரியார்புரம் பகுதியில் நங்கை என்ற பெயரில் திருநங்கை ஒருவர் குறைந்த விலையில் உணவகம் தொடங்கி உள்ளார்.
தூத்துக்குடியில் வாரம்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறைக்கேட்கும் நிகழ்வில், சமூக நலத்துறை சார்பாக திருநங்கைகளுக்கு தலா இருபதாயிரம் வீதம் பத்துபேருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார். இந்த உதவி பெற்ற திருநங்கை காயத்ரி தூத்துக்குடி சவோரியார்புரம் பகுதியில் நங்கை என்ற பெயரில் குறைந்தவிலை உணவகம் தொடங்கினார். இதனை தாளமுத்து காவல் ஆய்வாளர் சங்கர் திறந்து வைத்தார். திருநங்கை ஒருவர் உணவகம் திறந்திருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை என கருதப்படுகிறது.
Next Story