குரூப் 2 தேர்வில் 6 கேள்விக்கு தவறான விடைகள் : மதிப்பெண் வழங்க தேர்வாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் 6 கேள்விகளுக்கான விடைகள் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால், அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரூப் 2 தேர்வில் 6 கேள்விக்கு தவறான விடைகள் : மதிப்பெண் வழங்க தேர்வாளர்கள் கோரிக்கை
x
மாநில முழுவதும் கடந்த 11ஆம் தேதி நடந்த குரூப் 2வின் முதல்நிலைத்தேர்வை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். இதற்கான விடைகளை டிஎன்பிஎஸ்சி, தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 6 கேள்விகளுக்கான விடைகள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாக தேர்வு  எழுதியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தவறான விடைகளுக்கு உரிய மதிப்பெண்களை டிஎன்பிஸ்சி வழங்க வேண்டும் எனவும் தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்