7 பேருக்கு விடுதலை கிடைக்கும் - "தந்தி டிவி"- க்கு கைப்பட எழுதிய கடிதத்தில் நளினி நம்பிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக வேலூர் மகளிர் சிறையில் இருக்கும் நளினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
தமது வழக்கறிஞர் மூலம், தந்தி டிவியின் கேள்விகளுக்கு, நளினி கைப்பட பதில் எழுதி, அனுப்பி உள்ளார். இதில், தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், அதிமுக நிர்வாகிகள் 3 பேர் விடுதலைக்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலை குறித்து, தமிழக ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதம் குறித்த கேள்விக்கு, இதுவரை  பதில் இல்லை என்றும், விரைவில் விடுதலை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நளினி, தனது நம்பிக்கையை வெளியிட்டு உள்ளார். 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு, நளினி, நன்றி தெரிவித்துள்ளார். மகள் திருமணம் குறித்த கேள்விக்கு, தாம் விடுதலை அடைந்ததும்,  லண்டனில் மகள் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக நளினி நம்பிக்கையுடன், தனது கைப்பட பதில் எழுதி, தந்தி டிவிக்கு அனுப்பி உள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்