தங்க நகை வியாபாரியை வழிமறித்து மந்திரம் ஓதுவதாக கூறி 52 சவரன் நகை கொள்ளை

நேற்றிரவு ஷரிபுல் ஹக் 52 சவரன் தங்க நகைகளை ஷாகிப்பிடம் கொடுத்து பாலீஷ் போட அனுப்பி வைத்தார்.
தங்க நகை வியாபாரியை வழிமறித்து மந்திரம் ஓதுவதாக கூறி 52 சவரன் நகை கொள்ளை
x
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஷரிபுல் ஹக். இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வேலை பார்த்து வருபவர் சாகிப். நேற்றிரவு ஷரிபுல் ஹக்  52 சவரன் தங்க நகைகளை ஷாகிப்பிடம் கொடுத்து பாலீஷ் போட அனுப்பி வைத்தார். இதில் யானை கவுனி வால்டாக்ஸ் சாலையில் செல்லும் போது அடையாளம் தெரியாத 3 பேர்  ஷாகிப்பை மறித்து மந்திரம் ஓதுவதாக கூறி 52 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இதனையடுத்து நகைபறிப்பு தொடர்பாக ஷரிபுல் ஹக் போலீசாருடன்  தகவல் கொடுத்தார். போலீசார் தகவலின் பேரில் நகையை கொள்ளையடித்துச் 3பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்