கர்ப்பிணி பெண், ஆம்புலன்சில் சென்ற போது குழந்தை பிறந்தது
திருப்பூரில் பனியன் தொழிலாளி ஒருவரின் மனைவிக்கு ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது.
திருப்பூரில் பனியன் தொழிலாளி ஒருவரின் மனைவிக்கு ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது. கல்லாங்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி உமா பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உமாவுக்கு பிரசவ வலி அதிகமானதால், ஆம்புலன்ஸ் வழியிலேயே நிறுத்தப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது, உமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Next Story