ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் நகை ஏஜெண்ட் ஓட்டம்

கரூரில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளுடன் வடநாட்டு நகை ஏஜெண்ட் தலைமறைவானதை அடுத்து, கரூர் டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் நகை ஏஜெண்ட் ஓட்டம்
x
கரூரில் தனியார் நகைக் கடை ஒன்றுக்கு மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த தீபக் மிட்டல் என்பவர் 10 ஆண்டுகளாக நகை சப்ளை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் கட்டிகளை வாங்கி சென்ற தீபக் மிட்டல் தலைமறைவாகியுள்ளார். தீபக் மிட்டலுடன் கடந்த 2-ஆம் தேதி முதல் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், கரூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் கடை உரிமையாளர் நந்தா ராஜேஷ் புகார் அளித்தார். 

இதனையடுத்து, கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படை போலீசார் தீபக் மிட்டலை தேடி குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்