குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு : வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி ஊழியர்கள் அதனை சரி செய்யவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story