பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழப்பு
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்தனர்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்தனர். கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவரும், நீலிகோணாம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வன் என்பரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
Next Story