அம்பேத்கர் படம் இருந்த பீடம் அவமதிப்பு - பதற்றத்தை தணிக்க போலீசார் குவிப்பு

நெல்லை அருகே அம்பேத்கர் உள்பட தலைவர்கள் படம் வைக்கப்பட்டிருந்த பீடம் அவமதிக்கப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
அம்பேத்கர் படம் இருந்த பீடம் அவமதிப்பு - பதற்றத்தை தணிக்க போலீசார் குவிப்பு
x
சேந்திமங்கலம் கிராமத்தின் நடுவே, வீரன் சுந்தரலிங்கம், அம்பேத்கர் மற்றும் இம்மானுவேல் தலைவர்கள் புகைப்படம் வைக்கப்பட்டு ஒரு பீடம் உள்ளது. இன்று அதிகாலை இரு சக்கர  வாகனத்தில் வந்த 2 நபர்கள், மாட்டு சாணத்தை கரைத்து பீடத்தின் மீது ஊற்றி அவமதிப்பு செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த தகவல் வேகமாக பரவியதை தொடர்ந்து கிராமமக்கள் அனைவரும் பீடத்தின் முன் திரண்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார், சேந்திமங்கலம் கிராமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். மர்ம நபர்களை கைது செய்யும் வரை கலைந்து செல்லமாட்டோம் என கிராமமக்கள் உறுதியாக கூறினர். இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவுவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்