ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

லாரியை நிறுத்தி விட்டு ஓடிய மர்ம நபர்களுக்கு வலை
ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
x
சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை நோக்கி வந்த மினி லாரி ஒன்று, சாலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்த ஓட்டுநர் உள்ளிட்டவர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதையடுத்து, மினி லாரியை போ​லீசார் சோதனையிட்டபோது, அதில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த புகையிலை பொருட்களின் மதிப்பு 10 லட்சம் ரூபாயாகும். ஒரு டன் எடையிலான அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்