காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகள் : ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தோட்டக்குறிச்சியில் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க உத்தரவிட்டிருந்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தோட்டக்குறிச்சியில் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கரூர் ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, ஆட்சியர் அன்பழகன், கோட்டாட்சியர் சரவணகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
Next Story