சட்ட விரோதமாக கருக்கலைப்பு : சேலம் மாவட்ட ஸ்கேன் மையத்துக்கு சீல் வைப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனியார் ஸ்கேன் மையம் ஒன்றில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மற்றும் பாலினத்தை கண்டுபிடித்து கூறியதாக புகார்கள் எழுந்தன.
சட்ட விரோதமாக கருக்கலைப்பு : சேலம் மாவட்ட ஸ்கேன் மையத்துக்கு சீல் வைப்பு
x
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனியார் ஸ்கேன் மையம் ஒன்றில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மற்றும் பாலினத்தை கண்டுபிடித்து கூறியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது அது உண்மை என்றும், ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஸ்கேன் மையத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். ஸ்கேன் மைய உரிமையாளரும், ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரியுமான சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டார்.இதேபோல் ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் சட்ட விரோதமாக செயல்பட்ட ஸ்கேன் மையங்கள் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்