அறிவியல் கண்காட்சி- மாணவர்கள் ஆர்வம்

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அறிவியல் கண்காட்சி- மாணவர்கள் ஆர்வம்
x
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே  தனியார் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட ராக்கெட், விண்கலங்களின் மாதிரிகள் வைக்கப்பட்டு, விளக்கம் அளிக்கப்பட்டது. கேரள அரசின் விவசாய துறை சார்பில் பொறியியல் கருவிகள், விவசாய விளை பொருட்கள் மற்றும் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட அரிய பல கருவிகளும், கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளும் இந்த அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

Next Story

மேலும் செய்திகள்