சுகாதார பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு : ரயில் நிலைய நிர்வாகத்திற்கு அபராதம்

காஞ்சிபுரத்தில் உள்ள ரயில் நிலைய நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு : ரயில் நிலைய நிர்வாகத்திற்கு அபராதம்
x
காஞ்சிபுரத்தில் உள்ள ரயில் நிலைய நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று திடீரென காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் ரயில் நிலைய நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும் ரயில்வே குடியிருப்புக்கு 500 ரூபாயும் அபராதமாக விதித்து மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்