கடலூர் பேருந்து மீது கார் மோதி விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது அதன் பின்னால் வந்த கார் மோதியது.
கடலூர் பேருந்து மீது கார் மோதி விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
x
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது, அதன் பின்னால் வந்த கார் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த லோகநாதன், அவரின் இரண்டு மகன்கள் சிவராமன் மற்றும் நிர்மல் குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் லோகநாதனின் மருமகள் ஷாலினி மற்றும் அவர்களது மகன் தர்ஷன் ஆகிய இருவர் படுகாயமடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்