நாட்டு வெடி வெடித்து 12 வயது சிறுவன் பலி : 2 சிறுவர்கள் படுகாயம்

நாமக்கல் அருகே வடுகபட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் மணிவேல், தமது நண்பர்களுடன் தீபாவளியை ஒட்டி, பட்டாசு வெடித்துள்ளார்.
நாட்டு வெடி வெடித்து 12 வயது சிறுவன் பலி : 2 சிறுவர்கள் படுகாயம்
x
நாமக்கல் அருகே வடுகபட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் மணிவேல், தமது நண்பர்களுடன் தீபாவளியை ஒட்டி, பட்டாசு வெடித்துள்ளார். கோவில் திருவிழா காலங்களில் கயிறு கட்டி வெடிக்கப்டும்  நாட்டு வெடிகளை நிலத்தில் புதைத்து வெடித்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக, மணிவேலின் மார்பு பகுதியிலும், சூர்யா வசந்த் ஆகியோருக்கு உடல் பாகங்களில் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில், மணிவேல், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நாட்டு வெடிகளை எங்கு வாங்கினார்கள், யார் விற்பனை செய்தார்கள் என்ற கோணத்தில் சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்