தங்க நகை விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.
தங்க நகை விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு
x
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். தங்கம் விலை ஒரு சவரன் 24 ஆயிரம் ரூபாயை தாண்டிய போதிலும், முதலீடுகளுக்காக மக்கள், தங்க நகைகளை அதிகம் வாங்கிச் செல்வதாக தெரிவித்தார். ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்