டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு - மதுபானம் ஏற்றி வந்த வேனை மறித்து போராட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு - மதுபானம் ஏற்றி வந்த வேனை மறித்து போராட்டம்
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.வெள்ளாகுளம் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மதுபானம் கொண்டு வந்த வேனை வழி மறித்த போராட்டக்காரர்கள், மது பாட்டில்களை எடுத்து உடைத்து சூறையாடினர். தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்