அரசு முத்திரையை பயன்படுத்தி மோசடி : ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் கைது

அரசு முத்திரையை பயன்படுத்தி மோசடி : ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் கைது
அரசு முத்திரையை பயன்படுத்தி மோசடி  : ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் கைது
x
மோசடி புகாரில், ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார். சிவகங்கையை சேர்ந்த அண்ணாதுரை என்பவர், சென்னையில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர், சிவகங்கையில் பலரிடம் அரசு நிலம் பெற்று தருவதாக கூறி தலா 25 ஆயிரம் வீதம் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். மேலும், போலி பட்டா சான்றிதழில், போலி அரசு முத்திரையுடன் தனது கையெழுத்தை போட்டு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில்,  அண்ணாதுரையை சிவகங்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி பத்திரங்கள், அரசு முத்திரைகள், ரப்பர் ஸ்டாம்ப் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்