காவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை : ரூ.2.58 லட்சம் பணம், பட்டாசு, ஆடைகள் பறிமுதல்

காவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை : ரூ.2.58 லட்சம் பணம், பட்டாசு, ஆடைகள் பறிமுதல்
காவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை : ரூ.2.58 லட்சம் பணம், பட்டாசு, ஆடைகள் பறிமுதல்
x
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காவல் ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ் மீதான புகாரின் பேரில் நடந்த இந்த சோதனையில், கணக்கில் வராத இரண்டு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளரின் வீட்டில் நடந்த சோதனையில் 100 பெட்டி பட்டாசுகளும் 120 செட் ஆடைகளும் சிக்கின. இதையடுத்து ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இதற்கிடையே, காவல் நிலையம் முன்பு, பட்டாசுகள் வெடித்து கூலி தொழிலாளர்கள் கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்