ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை

ஆன்லைனில் மருந்து வகைகளை விற்பனை செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை
x
* பதிவு செய்யப்படாத ஆன்லைன் விற்பனையகங்கள் மூலம், காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* உரிய மருத்துவச் சீட்டு இல்லாதவர்களுக்கும் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யப்படுவதால், மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

* இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்