"திருச்சி அருகே உடையும் அபாயத்தில் பங்குனி அணை" : சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை

பங்குனி அணை இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறும் விவசாயிகள், அணையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி அருகே உடையும் அபாயத்தில் பங்குனி அணை : சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை
x
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலம் ஊராட்சியில், கடந்த 1941 ம் ஆண்டு பங்குனி அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணையால் சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது இந்த அணை இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறும் விவசாயிகள், அணையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்