மர்ம காய்ச்சலால் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

சென்னை சூளைமேட்டில் மர்ம காய்ச்சலால் ஒன்றரை வயது பெண் குழந்தை சிவஸ்ரீ உயிரிழந்தார்.
மர்ம காய்ச்சலால் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
x
நேற்று நள்ளிரவு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்தார். மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் ஐஸ்வர்யா என்ற 5 ஆம் வகுப்பு மாணவி, காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஐஸ்வர்யா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த கோபிநாத் என்ற பொறியாளர், பன்றி காய்ச்சலால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கோபிநாத்தை, புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரத்தப் பரிசோதனை செய்ததில் அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.புதுக்கோட்டை மாவட்டம் பல்லவராயன் கிராமத்தில், மணமகனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, திருமணம் நிறுத்தப்பட்டது. மணமகன் பாண்டியன் குணமடையாததால் மருத்துவமனையில் இருந்து அனுப்ப மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்