நாளை தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா : ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், 111 வது ஜெயந்தி விழா மற்றும், 56 வது குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது.
நாளை தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா : ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு
x
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், 111 வது ஜெயந்தி விழா மற்றும், 56 வது குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா விமான கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் செயல் விளக்கம், தென்மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பசும்பொன், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்