டெல்லி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்த தமிழக மாணவி தற்கொலை ? : பெற்றோர் டெல்லி விரைந்தனர்
டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. விடுதியில் தங்கி படித்த அந்த பெண் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கராஜ் என்பவரது மகள் ஆவார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு ஐஏஎஸ் கனவுடன் அப்பெண் டெல்லி சென்றுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்ததையடுத்து ஸ்ரீமதியின் பெற்றோர் டெல்லி விரைந்துள்ளனர்.
Next Story