மலை உச்சியில் கயிற்றில் தொங்கிய நிலையில் எலும்புக்கூடு

திருச்சி மாவட்டம் தொட்டிச்சி மலைப் பகுதியில், கயிற்றில் தொங்கிய நிலையில் எலும்புக் கூடு இருப்பதாக வனத்துறை மற்றும் வையம்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மலை உச்சியில் கயிற்றில் தொங்கிய நிலையில் எலும்புக்கூடு
x
திருச்சி மாவட்டம்  தொட்டிச்சி மலைப் பகுதியில், கயிற்றில் தொங்கிய நிலையில் எலும்புக் கூடு இருப்பதாக வனத்துறை மற்றும் வையம்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் சென்று பார்த்த போது,  இறந்து சில மாதங்கள் ஆன நிலையில் ஒரு ஆணின் எலும்புக் கூடு இருந்துள்ளது.  அந்த எலும்புக் கூட்டை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்து கொண்டு வந்து கயிற்றில் தொங்கவிட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்