குரூப்-4 தேர்வு : 31,425 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி

குரூப்-4 பணிக்காக 31 ஆயிரத்து 425 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு, தகுதி பெற்றுள்ளனர்.
குரூப்-4 தேர்வு : 31,425 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி
x
* குரூப்-4 நிலையில், 9 ஆயிரத்து 351 பேரை பணி நியமனம் செய்வதற்கான போட்டித்தேர்வு முடிவுகள், கடந்த ஜூலை 30 ம் தேதி வெளியானது.

* சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 31 ஆயிரத்து 425 பேர் தகுதி பெற்றனர் எனத் தெரிவித்த டி.என்.பி.எஸ்.சி., தங்களுடைய சான்றிதழ்களை, தேர்வாணைய இணையதளத்தில் அவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

* தற்போது, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யப்பட்டதன் நிலையை, தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்களின் பெயர் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

* சான்றிதழ் சரிபார்த்தலுக்குப்பின், கலந்தாய்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் பெயர் பட்டியல், விரைவில் தனியாக வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்