மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலி

திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர்.
மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலி
x
திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். சின்ன எடப்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த 6 வயதுடைய வீரா என்ற சிறுவனும், அதேபோல் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் 3 வயதுடைய அட்ஷிதா என்ற சிறுமியும் அடுத்தடுத்து நேற்று இரவு மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். சுகாதாரத்துறை தீவிரமாக செயல்படாததே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள பெற்றோர்கள், இனியாவது காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்