பாடத்திட்டம் குறித்து கருத்து சொல்ல அவகாசம் நீட்டிப்பு..
அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஆங்கில வழியில், மழலையர் கல்வி சேர்க்கை அமலுக்கு வருகிறது. இதற்காக புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஆங்கில வழியில், மழலையர் கல்வி சேர்க்கை அமலுக்கு வருகிறது. இதற்காக புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 30 ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவம்பர் முதல் வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. நவம்பர் இரண்டாவது வாரம் அனைத்து கருத்துக்களையும் ஆய்வு செய்து, பாடத்திட்டம் இறுதி செய்யப்படும் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story