சாராயம் தயாரிக்க பயன்படும் வெல்லம் பறிமுதல்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் 100 மூட்டை வெல்லத்தையும், அதனை ஏற்றிச் சென்ற 2 வேன்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சாராயம் தயாரிக்க பயன்படும் வெல்லம் பறிமுதல்
x
* சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே சாராயம் தயாரிக்க  பயன்படுத்தப்படும் 100 மூட்டை வெல்லத்தையும், அதனை ஏற்றிச் சென்ற  2 வேன்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  இடையபட்டி சோதனை சாவடி அருகே வனக்காப்பாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில், சேலத்திலிருந்து வெள்ளிமலைக்கு சென்ற  வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 50 மூட்டை வெல்லம் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, ஏத்தாப்பூர் போலீசாரிடம், வெல்லம், அதனை ஏற்றி வந்த வேன் மற்றும் ஓட்டுநரை வனத்துறையினர் ஒப்படைத்தனர். 

* இதேபோன்று, கருமந்துறை மலைக்கு செல்லும் பாதையில் உள்ள சோதனை சாவடி அருகே சேலத்திலிருந்து வெள்ளிமலைக்கு எடுத்து சென்ற  50 மூட்டை வெல்லத்தையும் பறிமுதல் செய்த போலீசார், 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் 3 பேரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்