கொலை வழக்கில் 9 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்

பட்டுக்கோட்டை அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நீதிமன்றத்தில் 9 இளைஞர்கள் சரணடைந்து உள்ளனர்.
கொலை வழக்கில் 9 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்
x
* தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள தாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி தம்பா கார்த்திக், ஆகஸ்ட் 13- அடித்துக் கொல்லப்பட்டார்.

* இது தொடர்பாக  நரியம்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் உள்பட 7 பேரை பட்டுக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வந்த பிரகாஷ் உள்பட 7 பேரும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட்டு வந்தனர். 

* கடந்த 23 ம்தேதி காலை வழக்கம்போல் கையெழுத்து போட்டுவிட்டு 7 பேரும் சரக்கு வாகனத்தில் திரும்பி வந்த போது,10 பேர் கொண்ட கும்பல்  மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. பிரகாஷை  அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததுடன், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பாளையம் என்ற இடத்தில் தலையை வைத்துவிட்டு  தலைமறைவானது. 

* இந்த கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில், 9 இளைஞர்கள் பரமக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை வரும் 29 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்