மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள்

ஒசூர் அருகே சித்தாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் 4 வயது மகள் வளர்மதி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காய்ச்சலால் அவதிப்பட்டு உயிரிழந்தார்
மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள்
x
ஒசூர் அருகே சித்தாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் 4 வயது மகள் வளர்மதி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காய்ச்சலால் அவதிப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வேடியப்பனின் மகள் சரண்யா, காய்ச்சலால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டவர், உடல்நலம் மேலும் குன்றியதால் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்தடுத்து நிகழும் மர்ம காய்ச்சல் உயிரிழப்புகளால் சித்தாண்டபுரம் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்