வெள்ளி விழா காணும் விழுப்புரம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு

வெள்ளி விழா காணும் விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன சின்னங்கள் இருந்தும் அவற்றைப் பாதுகாக்க முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
வெள்ளி விழா காணும் விழுப்புரம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு
x
கடந்த 1993ஆம் ஆண்டு உதயமானது விழுப்புரம் மாவட்டம். பழமையான கல் மரங்கள், பாறை ஓவியங்கள், சமணர் படுகை, தொன்மையான தமிழ் எழுத்துக்கள் என தோண்டத் தோண்ட பொக்கிஷங்களைக் கொண்டிருக்கிறது இந்த மாவட்டம்.

இந்த பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாதுகாப்பற்ற நிலையில், இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சிலைகள், கல்வெட்டுக்கள் திறந்த வெளியில் இருக்கின்றன என்று தெரிவிக்கும் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், 3 சிலைகள் திருடு போயுள்ளதாக, அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாகத்தில், இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படுமா என்பதே, விழுப்புரம் மாவட்ட மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்